வியாழன், 16 ஜூன், 2011

ஆருயி ரமுதோனே ஆறுமுகா
அன்பிற் கரையிலா ஷண்முகா
பாரும் எனையுன திருமலரால்
பாலனிவ னிடமுள பாவால்
காருமெனை கடைவழி யோடிரு
காந்தலி டையாள் கமலனாய்
செருமென்னை செம்பவள பாதம்
செய்யுளினை சேகரியும் சந்தகனே!

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

நிந்தன் பதமெந்தன் முதலென் றன்நின்
நிழலென் குடில்என்றேன் இவன்றோ
விந்தையோ னிந்த விமலன் இடர்தீர்
வீசியோ தந்தன் வெஞ்சிறை விடுத்தோய்
இந்திரையே இருதளிர் கரமொடு மருவருவா
மலராய் மலரதனை மனதோடு அணைத்தாய்
எந்தன் தேகமுன் னடிகளில் தீபமாய்
ஏற்றிட வேண்டினேன் ஆற்றுவாய் அன்னையே !

சனி, 19 பிப்ரவரி, 2011

காஞ்சி நகருனதே அல்லவேயாம் ஆங்கே
கடையவர் வழியினில் காட்சியு மல்லையே
அஞ்சே மாண்புறு மதுரை வாழ்தேவி
அழிவிலை என்மனத் தினில் தீபமாய்
வெஞ்சி உனை காசியில் மாசுற
விடேனோ வெண்தாமரை தடாகம் அன்றோ
நெஞ்சே நின்நினை வினில்நிலை இலையெனில்
நாடுவாய் என்னது நாவினில் பாவாய்

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

எனையொரு பொருட்டா ஏற்றினை
அடியவர் புகழிட பாவானாய் அல்லே
கனிந்தே அமுத மழை கனந்துற கண்ணில்
காட்சியோ டியைந்த மாட்சி தந்தே
நனைந்தே னுன்னருள் மழையினி லருகுபோல்
நவின்றே நாவால் திறமொடு அருளினை
நினைந்தோர் நெஞ்சத்து உரிமையோ செந்
நகரினில் எழுந்தாய் சேவடி தந்தாய்

கடவுள் வாழ்த்து

அன்பனே போற்றி

அருள்செய் வகைசெய்

மருளுடை வாசனே போற்றி

ஆரமுதே போற்றி

அன்பிலே உருகிடும்

பொன்மான சுடரே போற்றி

இச்சகா போற்றி

இருளிடை தோன்றிடும்

ஒளியினாய் போற்றி

ஈசகா போற்றி

இன்பமே தந்திடும்

ஷண்முகா போற்றி

உலகனே போற்றி

உய்விட ஓர்க்கும்

மெய்யனே போற்றி

ஊர்விதா போற்றி

ஊற்றிடை பெருகிடும்

உத்தமா போற்றி

என்னவா போற்றி

யேமனை எரித்திடும்

அண்ணலே போற்றி

ஏந்தலே போற்றி

எண்திசை வணங்கிடும்

கந்தனே போற்றி

ஐயனே போற்றி

அருலிடை மலர்ந்திடும்

ஆதவா போற்றி

ஒளிர்ந்தவா போற்றி

உலகினை காத்திடும்

ஒருவனே போற்றி

ஓங்கினாய் போற்றி

உமையவள் உருகிடும்

அறுமுகா போற்றி

ஒளவினாய் போற்றி

அகத்திடை அகலா

ஆண்டவா போற்றி

அக்துன தருளே

மாற்றிட வேண்டேன்

சிற்றிடை நாயகா

போற்றி போற்றி